சங்கத்தைப் பற்றி

about


தமிழ்நாடு பார்க்கவன்‌ பாதுகாப்பு சங்கம் 2016 ம் வருடம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வரும் ஒரு மாநிலச் சங்கம் ஆகும். இந்த சங்கத்தின் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள நம் பார்க்கவ இன மக்களை ஒருங்கிணைப்பதும், அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்வதும் மற்றும் நம் இனத்தின் வரலாற்றை மீட்டெடுத்து, அதனை பாதுகாப்பதும் ஆகும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களில் பரவியிருக்கும் நம் இனம் சார்ந்த அனைத்து மக்களின் மக்கள் தொகையை கணக்கெடுத்து, அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்து, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தொகை எவ்வளவு என்பதை அறிந்து, அவர்களுக்கு பயனுள்ள வகையில் திருமணம், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு போன்றவற்றை ஏற்பாடு செய்யவும் இந்த சங்கம் முனைந்துள்ளது.

இன ஒற்றுமைக்கு உறுதுணையாகவும், நம் இன மக்களை சமூக மற்றும் சமுதாயத்தின் முக்கிய பிரிவுகளான அரசியல், மற்றும் அதிகாரத்தின் மூலம் நம் இன மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான இடங்களை பெற்று தருதல்.

நம் மாணவர்களின் படிப்பு திறனை மேம்படுத்த பயிற்சி மையங்கள் அமைத்து, இலவசமாக செயல்பட்டு நம் இன இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பது.

விளையாட்டு, கலை, அறிவியல், மற்றும் திறன் சார்ந்த நம் இன மக்களுக்கு அங்கீகாரம் செய்து அவர்களை கௌரவிக்கவும் இந்த சங்கம் தம் பணிகளை முன்னெடுக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள நம் இனம் சார்ந்த திறன் பெற்ற மருத்துவர்கள், பொறியியல் பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ள நம் இன மக்களை ஒன்று சேர்த்து, அவர்களின் மூலம் நம் இன மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய நம் சங்கம் ஒரு நல்வழிகாட்டியாக செயல்படும்.

நம் சமுதாய இளைஞர் சார்பில் கலை, இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை ஊக்கபடுத்த சங்கம் முன்னெடுக்கும்.

மாவட்டந்தோறும் விளையாட்டு மற்றும் தனி நபர் திறனை ஊக்கப்படுத்த சங்கம் உறுதுணையாக இருக்கும்.

விதிமுறைகள்:-

1. அனைத்து கலந்தாய்வு கூட்டம் மற்றும் சந்திப்பில், காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளப் பழக வேண்டும்.

2. தனி ஒருவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக பேசி சுமூகமாக தீர்க்க பட வேண்டும். அவரை பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் செயல்களை ஒரு போதும் செய்ய கூடாது.

3. தன்னுடைய கருத்து மட்டும் தான் சரியானது என்று நீண்ட நெடிய விவாதத்தை மற்றவர்களிடம் முன்வைக்க கூடாது.

4. சங்கத்தில் எவரேனும் தவறான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களை பற்றி மாவட்ட நிர்வாகியிடம் அல்லது தலைமைக் குழுவிடம் கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்யலாம்.

5. எப்போதும் குறை மட்டுமே கூறி கொண்டு இல்லாமல், மற்றவர்களின் நிறைகளை மனதார புகழக் கற்று கொள்ள வேண்டும்.

6. களப்பணி அல்லது விழிப்புணர்வு பேரணி போன்றவற்றில், தனி மனித துதி பாடல் இல்லாமல், செயல்களின் அடிப்படையில் சம்பந்த பட்ட குழுவை அங்கீகரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

7. அனைத்து செயல்களிலும் நம்பகத்தன்மை (Accountability) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) மிக முக்கியம்.

8. தான் எடுத்து கொண்ட களப்பணியை யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் செவ்வனே செய்து முடிப்பேன் என்று முழு மன நிறைவோடு செய்ய வேண்டும்.

9. தலைமையின் செயல்பாடுகளில் கேள்வியெழுப்ப உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு. தக்க விளக்கமளிப்பதும் தலைமையின் கடமையாகும். சங்கத்தின் செயல்பாடுகளில் முரண்பாடு ஏற்படும்போது அமைப்பைப் (சங்கத்தை) பொதுவெளியில் தூற்றாமல் தாமாக விலகிவிட வேண்டும்.

10. யாருடைய செயல்பாடுகளும் பதவியை நோக்கியோ அல்லது வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு இருக்க கூடாது.